மாமன் வீடு

பல்லாங்குழி, பரமபதம்‌,

கண்ணாம்பூச்சி, கிச்சுக்‌ கிச்சுத்‌ தாம்பாளம்‌, ஆடுபுலி

ஆட்டம்‌ ,பம்பரம்‌

அத்தனையும்‌ விளையாடி;

நெற்றி வியர்வை அரும்ப;

மாமன்‌ வீட்டுத்‌ திண்ணையிலே;

மரிக்கொழுந்து வாசம்‌ பிடித்து;

மாமிக்‌ கொடுத்த நீர்‌ மோரில்‌;

மதி மயங்கி கிடக்கையிலே;

மதிய உணவு நேரத்திலே;

மதில்‌ மேல்‌ பூனை ஒன்று;

மீன்‌ குழம்பு மணக்கிறதென்று;

செய்தி சொல்லிச் சென்ற கதை;

அத்தனையும்‌ பத்திரமாக;

நெஞ்சில்‌ ஞாபகமாய்‌;

நிறைந்து காணப்படும்‌;

அன்றும்‌ இன்றும்‌ என்றும்‌!!


~இரா

Comments

Popular posts from this blog

"Mugs, Memories, and a Dash of Irony"

"The Lighthearted Magic of School Life"

"Nooks That Count"